×

சி.டி விவகாரத்தை திசை திருப்பும் பாஜ: யு.டி காதர் குற்றச்சாட்டு

பெங்களூரு: முன்னாள் அமைச்சர் ரமேஷ்ஜார்கிஹோளி சி.டி. வழக்கை எஸ்.ஐ.டி. விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இந்த விஷயத்தை திசைதிருப்பும் வேலையை பா.ஜ. செய்து வருகிறது என்று யு.டி.காதர் தெரிவித்தார். பெங்களூரு விதானசவுதா அருகே இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் யு.டி.காதர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் ரமேஷ்ஜார்கிஹோளி சி.டி. வழக்கை எஸ்.ஐ.டி. விசாரணை நடத்தி வருகிறது. அவர்களுக்கு உதவி செய்து சுதந்திரமாக விசாரணை நடத்த அவகாசம் கொடுக்க வேண்டும். அதே போல் ரிப்போர்ட் வரும் வரை காத்திருப்பதை விட்டு திசைதிருப்பும் வேலையில் ஈடுபடுவது வேண்டாம். பாதிக்கப்பட்ட பெண் இவர் தான் இருந்தார் என்று தெரிவிக்கவில்லை. பா.ஜ. தன்னுடைய செயலிழப்பை மறைக்க இது போன்ற திசைத்திருப்பும் வேலையில் ஈடுபட்டுள்ளது. முடிந்த வரை மாநில அரசு எஸ்.ஐ.டி. விசாரணையை தவிர்த்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடுவது நல்லது. அதே போல் சிறிய வகையான கல்குவாரிகள் நடத்துவதை மூடினால் வளர்ச்சி பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும். ஷிவமொக்கா, சிக்கபள்ளாபுரா மாவட்டங்களில் வெடி விபத்துக்கள் ஏற்பட்ட பின்னர் கடலோர பகுதிகளில் கருப்பு கல்குவாரிகள் நடத்த சுரங்கம் மற்றும் நில அறிவியல் துறையின் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதன் மூலம் வளர்ச்சி பணிகளுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது’’ என்றார்….

The post சி.டி விவகாரத்தை திசை திருப்பும் பாஜ: யு.டி காதர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,UT Khader ,Bengaluru ,Former Minister ,Ramesh Jarkiholi C.T. ,SIT ,UT ,Khader ,Dinakaran ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...